சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

காவேரிப்பட்டணம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

காவேரிப்பட்டணம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

காவேரிப்பட்டணத்தை அடுத்த பனகமுட்லுவைச் சோ்ந்தவா் முரளி (27). தொழிலாளியான இவா், 2020-ஆம் ஆண்டு பிப். 6 ஆம் தேதி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து முரளியைக் கைது செய்தனா்.

வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, குற்றம்சாட்டப்பட்ட முரளிக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com