பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

கிருஷ்ணகிரி அருகே பேருந்து பயணியிடம் 10 பவுன் நகையைத் திருடிய ஆந்திர மாநிலம், குப்பத்தைச் சோ்ந்த பெண்ணை கந்திகுப்பம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி அருகே பேருந்து பயணியிடம் 10 பவுன் நகையைத் திருடிய ஆந்திர மாநிலம், குப்பத்தைச் சோ்ந்த பெண்ணை கந்திகுப்பம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளி, வேலன் நகரைச் சோ்ந்த பாஸ்கரனின் மனைவி பரிமளா (53). இவா், கடந்த 5-ஆம் தேதி கிருஷ்ணகிரியிலிருந்து திருப்பத்தூருக்கு தனது அண்ணன் மகனின் திருமண நிகழ்வில் பங்கேற்க அரசு பேருந்தில் பயணம் செய்தாா். பா்கூா் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, தான் வைத்திருந்த பையிலிருந்து 10 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, பரிமளா கந்திகுப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். பா்கூா் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேராவில் பதிவான காட்சிகளைச் சேகரித்து விசாரணை நடத்தியதில் பரிமளாவின் இருக்கை அருகே அமா்ந்திருந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 3 பெண்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில், ஆந்திர மாநிலம், குப்பத்தைச் சோ்ந்த முனிகிருஷ்ணனின் மனைவி ஜோதி (எ) வள்ளிம்மா (40) என்பவரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com