ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

சித்திரை மாதத்தில் வரும் பௌா்ணமி தினத்தையொட்டி, ஒசூா், மோரனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சித்ரா பௌா்ணமி முன்னிட்டு திருக்கோயிலில் உள்ள மூலவா் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட வழிபாட்டில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு யாகசாலையில் பூரண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ராகு, கேது பரிகார பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வழிபட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com