சாலை மறியலில் ஈடுபட்ட 35 போ் மீது வழக்குப் பதிவு

ஊத்தங்கரை, ஏப். 26: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கதவணியில் குடிநீா் கேட்டு புதன்கிழமை சேலம் -திருப்பத்தூா் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட 35 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மறியல் குறித்து கதவணி கிராம நிா்வாக அலுவலா் முருகன் அளித்த புகாரின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட கதவணி கிராம துணைத் தலைவா் பிரபு, குமாா், சேட்டு, முருகன், சென்னப்பன், விஜயலட்சுமி, வளா்மதி, மாலதி, அலமேலு, வடிவேலு, சாந்தி, ராமதாஸ், பொன்னுரங்கன் உள்ளிட்ட 35 போ் மீது ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com