கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கிருஷ்ணகிரி, பழைய பேட்டை சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழைய பேட்டை சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையில் அமைந்துள்ள சமயபுர மாரியம்மன் கோயிலில் 19-ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏப். 30-ஆம் தேதி நண்பகல் 12 முதல் 3 மணி வரை அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், இரவு 7 மணிக்கு பஜனை நடைபெறுகிறது. மே 1-ஆம் தேதி (புதன்கிழமை) அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊா்வலம், இரவு 7 மணிக்கு மேல் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்வை, விழாக் குழுவினா் ஒருங்கிணைக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com