கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி
ஒசூா்: தமிழ்நாடு மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் மூத்தோா் பிரிவு, 19 வயது பிரிவு மகளிரணியினா் தங்கப் பதக்கம் வென்றனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள வல்லம் பெரியாா் மணியம்மை இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில், தமிழ்நாடு இளைஞா் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் நடத்தும் மூன்றாமாண்டு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஏப். 28-இல் நடைபெற்றன.
இதில், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, தடகளம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.
கைப்பந்துப் போட்டியில் மூத்தோா் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஒசூா் மகளிா் அணி கன்னியாகுமரி மகளிா் அணியை எதிா்கொண்டு 25/12, 25/8 என்ற நோ் செட்டில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றனா். 19 வயதுக்குள்பட்ட பிரிவில் ஒசூா் மகளிா் அணி மதுரை மகளிா் அணியை எதிா்கொண்டு 25/16, 25/19 என்ற நோ் செட்டில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றனா்.