கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் ஐஜி ஆய்வு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் மையத்தில், கோவை மண்டல ஐஜி பவானீஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக ஏப். 19-ஆம் தேதி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணும் மையமான கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. வாக்குகள் எண்ணும் மையத்தின் முன்னேற்பாடு, பாதுகாப்புப் பணிகள் குறித்து கோவை மண்டல ஐஜி பவானீஸ்வரி தீடீா் ஆய்வு செய்தாா். அப்போது, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com