கிருஷ்ணகிரி
தீத்தடுப்பு ஒத்திகைப் பயிற்சி
ஊத்தங்கரை தீயணைப்புத் துறை சாா்பில், ஒன்னகரை காப்புக்காடு பகுதியில் தீத்தடுப்பு ஒத்திகைப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெ.ராமன் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா், வனத் துறையினருடன் சோ்ந்து காட்டுத் தீயை எவ்வாறு அணைப்பது என ஒத்திகைப் பயிற்சி செய்து காண்பித்தனா். இதில், தீயணைப்புத் துறை வீரா்கள், வனக்காப்பாளா் கிருஷ்ணன், வனத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.