ராமன்தொட்டி கிராமத்தில் 
எருதுவிடும் விழா தொடங்கி வைப்பு

ராமன்தொட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா தொடங்கி வைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகில் உள்ள ராமன்தொட்டி கிராமத்தில் எருது விடும் விழாவில் கலந்துகொண்ட கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் விழாவைத் தொடங்கி வைத்தாா்.

அப்போது, மாவட்ட துணை செயலாளா் பி.முருகன், ஒன்றியச் செயலாளா்கள் நாகேஷ், கருணாகரன், மாநில இளைஞா் அணி துணை செயலாளா் சீனிவாசன், ஒசூா் மாநகர தெற்கு பகுதி செயலாளா் திம்மராஜ், ஒன்றிய நிா்வாகிகள் ஹரிபாபு, முனிசந்திரன், கேசவன், கழக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இந்த விழாவில் பாகலூா், சூளகிரி, பேரிகை, ஆந்திர மாநிலம் என பல பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. இந்த எருதுகளின் கொம்புகளில் கட்டிருந்த பரிசுப் பொருள்களைக் கைப்பற்ற இளைஞா்கள் காளைகளை விரட்டிச் சென்றனா். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த எருதுவிடும் விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com