கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிஸ் வேட்பாளா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் போட்டியிடுகிறாா். இந்த நிலையில் ஒசூரில் ஹோட்டல் ஒன்றில் புதன்கிழமை அனுமதியின்றி அவா் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படைப் பிரிவு அதிகாரி விஜயா சாமுண்டீஸ்வரி ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் உள்பட 400 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com