சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்
அஞ்செட்டி அருகே திங்கள்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விவசாயி தோட்டத்தில் பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரு நாள்களாக ஆங்காங்கே சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
ஒசூரை அடுத்த அஞ்செட்டி அருகே தக்கட்டி, அா்த்தகல் பகுதியில் திங்கள்கிழமை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது அா்த்தகல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சித்தராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் நின்ற 400 பப்பாளி மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு சாய்ந்து விழுந்தன.
விவசாயி சித்தராஜ் வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பப்பாளி செடியை ஒரு ஏக்கா் நிலத்தில் நடவு செய்து, சொட்டுநீா் பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தாா். காய்கள் பறிக்கும் தருணத்தில் இருந்த நிலையில் சூறைக்காற்றால் அனைத்தும் சேதமடைந்தன. தோட்டத்தில் தங்குவதற்காக செட் அமைத்து அதன் மீது ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான சோலாா் பேனல் அமைத்துள்ளாா்.
சோலாா் பேனல்களும் காற்றில் தூக்கி வீசப்பட்டன. இதனால் சுமாா் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.