தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் உலக தென்னை தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் உலக தென்னை மரங்கள் தினம் கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து ஆசிரியர் பெ.ராஜாங்கம் மாணவர்களிடம் கூறுகையில், ஆசிய பசிபிக் நாடுகளின் தென்னை கூட்டமைப்பு உருவான நாள் செப்டம்பர் 2. அதன் நினைவாக உலக தென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் மக்களுக்கு பயன் தருகிறது என்றார்.