தம்மம்பட்டியில் வியாழக்கிழமை மாலை அரை மணி நேரம் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அனல் காற்று வீசி வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால், அனல் காற்று அடங்கி, ஈரக் காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
எடப்பாடியில்...: அதேபோல, எடப்பாடி, கொங்கணாபுரம், வெள்ளரிவெள்ளி, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை கொட்டியது.
சுமார் 1 மணி நேரம் விட்டு விட்டு பெய்த மழையால் எடப்பாடியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.