தம்மம்பட்டியில் மழை

தம்மம்பட்டியில் வியாழக்கிழமை மாலை அரை மணி நேரம் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தம்மம்பட்டியில் வியாழக்கிழமை மாலை அரை மணி நேரம் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அனல் காற்று வீசி வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால், அனல் காற்று அடங்கி, ஈரக் காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 எடப்பாடியில்...: அதேபோல, எடப்பாடி, கொங்கணாபுரம், வெள்ளரிவெள்ளி, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை கொட்டியது.
 சுமார் 1 மணி நேரம் விட்டு விட்டு பெய்த மழையால் எடப்பாடியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com