சதாசிவபுரத்தில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், காட்டுக்கோட்டை வடசென்னிமலையை அடுத்துள்ள சதாசிவபுரத்தில் கடந்த 10 நாள்களாக குடிநீர் வராததைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தலைவாசல் போலீஸார் மற்றும் தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப் படுத்தினர். மேலும், குடிநீர் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைரும் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.