மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு தண்ணீர் திறப்பு நொடிக்கு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 7,249 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது, சனிக்கிழமை காலை நொடிக்கு 8,150 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 41.04 அடியாக உயர்ந்தது. கடந்த சில தினங்களாக அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இது சனிக்கிழமை மாலை நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. இதனால் நீர் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட 55 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. அணையின் நீர் இருப்பு 12.63 டி.எம்.சி.