கத்திமுனையில் விவசாயியிடம் பணம் பறித்ததாக, இளைஞர் கைது செய்யப்பட்டார்.
வாழப்பாடியை அடுத்த பள்ளத்தாதனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம் (40). இவர் மேட்டுப்பட்டி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை காலை நடந்து சென்றார்.
அப்போது அவரை வழிமறித்த இளைஞர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.3,000 பணத்தை பறித்துகொண்டு தப்பி சென்றார்.
புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் உமாசங்கர் வழக்குப் பதிந்து, பெருமாபாளையத்தைச் சேர்ந்த அசோக்குமாரை (30) என்பவரை கைது செய்தார்.