கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள உதவியாளர், காப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டுறவு தணிக்கை துறை ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள இளநிலைக் கூட்டுறவு தணிக்கையாளர், அலுவலக உதவியாளர், காப்பகத்தின் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலர் கன்னியப்பன், பொன்னிவளவன், ராமதாஸ், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முருகப்பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.