சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள அரபிக் கல்லூரியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 1,500 ஏழை இஸ்லாமியர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் உள்ளடக்கிய ரூ.2 ஆயிரம் மதிப்பிலான உணவுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
ஏற்காடு அடிவாரத்தில் உள்ள மர்கசுல் உலும் அல் இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை இஸ்லாமியர்களுக்கு உணவுப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரபிக் கல்லூரி தலைமை ஆசிரியர் ஆப்ரார் அகமது கலந்து கொண்டு சேலம் மாநகரத்தில் உள்ள 1,500 இஸ்லாமியர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பெட்டகங்களை வழங்கினார்.