இளம்பிள்ளை உழவர்சந்தையில் சேலம் வேளாண் துணை இயக்குநர் மணிவண்ணன் (வேளாண் வணிகம்) ஆய்வு செய்தார்.
நேரடி விற்பனையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனரா, அதிக விலைக்கு காய்கறிகள் வாங்கி விற்கப்படுகிறதா என்றும், விவசாயிகளிடமும் குறைகளை கேட்டறிந்து அப்பகுதியில் உள்ள சுற்றுப்புறத்தை சரியாக பராமரிக்கின்றனரா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.