தம்மம்பட்டி அருகே உலிபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஈச்சஓடைப்புதூரிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் உலக ஆசிரியர் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நாகியம்பட்டி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஹரிஆனந்த் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காந்திமதி, செங்காடு துவக்கப் பள்ளித் தலைமையாசிரியர் கணேசன் , ஆசிரியர்கள் வெர்ஜில் குமார், முத்துராமன், ஆனந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.