சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் எடப்பாடி நகர திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்துக்கு, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையேற்றார். நகர செயலாளர் டி.எம்.எஸ். பாஷா வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தேர்தல் பணிக் குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி பங்கேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மேட்டூர் கோபால், மாவட்ட துணைச் செயலாளர் க.சுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் டி.சம்பத்குமார், மாநில பொதுக் குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஏ.முருகேசன், மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் கே.எம்.ராஜேஷ், நெசவாளர்அணி பொருப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் வெள்ளாண்டிவலசு ஆர்.ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் நகரத் துணைச் செயலாளர் எம்.வடிவேல் நன்றி கூறினார்.