ஆத்தூர் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கச் செயற்குழுக் கூட்டம் தலைவர் என். செல்வராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஏ.எஸ். மாதேஸ்வரன் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஆத்தூர் ரயில் நிலைய நடைமேடை உயரம் குறைவாக அதாவது முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ரயிலில் ஏறுவதற்கு சிரமமாக உள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினர் க. காமராஜை சந்தித்து புகார் மனு அளிப்பது, ஆத்தூர் தேசிய புறவழிச்சாலையிலிருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்துக்கும், ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கும் நகரப் பேருந்து இயக்க வேண்டும் என ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மற்றும் போக்குவரத்து அலுவலரிடம் புகார் மனு கொடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் துணைத் தலைவர் ஆர். நடராஜன், இணைச் செயலாளர் ஆர். துரைராஜ், வழக்குரைஞர் ஆர். இராமமூர்த்தி, டி. ஜெயஆனந்த், வி.என்.எம். பிரகாஷ், முன்னாள் மாவட்ட வன அலுவலர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.