தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்தது.
கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் பகல்பொழுதில் கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக வெப்பத்தால் பெரிதும் அவதியுற்று வந்தனர். சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் மக்கள் தவித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு மேல் தொடர்ந்து அரைமணி நேரத்துக்கு லேசான மழை பெய்தது. இதனால் அனல் பறக்கும் வெயில் சற்றே தணிந்து, குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவியது.