சங்ககிரி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தனியார் வங்கி ஊழியர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்கோடு, மண்ணூர் அருகே உள்ள கேச்சிரகாடு பகுதியைச் சேர்ந்த சுகுமார் மகன் ரோஹித் (28). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்திலிருந்து சங்ககிரி செல்லும் வழியில், காளிப்பட்டி பிரிவு சாலை மேம்பாலம் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ரோஹித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.