மாணவி பாலியல் வழக்கில் தேடப்பட்ட இளைஞர் சேலம் நீதிமன்றத்தில் சரண்

அரூர் அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் ரமேஷ், சேலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை


அரூர் அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் ரமேஷ், சேலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, கடந்த நவ. 5 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் இளைஞர்கள் ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில், சதீஷை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த ரமேஷ் திங்கள்கிழமை பிற்பகல் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து, ரமேஷை 15 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரமேஷ் அழைத்துச் செல்லப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com