கிணற்றில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சங்ககிரி  அருகே கிணற்றில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி சனிக்கிழமை  உயிரிழந்தார். 

சங்ககிரி  அருகே கிணற்றில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி சனிக்கிழமை  உயிரிழந்தார். 
சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்த சுந்தரவடிவேல் மகன் சீனிவாசன் (19). இவர் அவரது தந்தையுடன் கூலி வேலை செய்து வந்தார்.  இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் வீராசாமி மற்றும் சிலர் அக்கமாபேட்டை ஆர்.கே. நகர் கிணற்றில் குதித்து குளித்துள்ளனர். இதில் சீனிவாசன் நீண்ட நேரமாகியும் நீரில் இருந்து வெளியே வராததையடுத்து பொதுமக்கள் சங்ககிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்து இளைஞரின் சடலத்தை மீட்டனர்.  இந்தச் சம்பவம் குறித்து  சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com