கெங்கவல்லி அருகே கடம்பூர் கிராமத்தில் அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் கால்நடை மருந்தகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி ஒன்றியச் செயலர் ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கடம்பூர் கூட்டுறவு சங்கச் செயலர் அழகன், சங்கத் தலைவர் காந்தி (எ) மனோகரன், உதவி இயக்குநர் அமிர்தவள்ளி, ஆத்தூர் கால்நடை பராமரிப்புத் துறை கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில்குமார், நித்யா, லட்சுமணன் வினோத் மற்றும் கால்நடை ஆய்வாளர் கோவிந்தன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சரவணன் மற்றும் பாலமுருகன், பால் கூட்டுறவு சங்கத் தலைவர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.