ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெருமுனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் நேரு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுமாதவன், குழந்தைவேல் சிறப்புரையாற்றினார்.
இதில், ஜனநாயக உரிமைகள் மீதும், கருத்து சுதந்திரத்தின் மீது மத்திய, மாநில அரசுகள் தொடுத்து வரும் தாக்குதலைக் கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் காந்தி பூங்கா, ஏற்காடு பேருந்து நிலையம், ஒண்டிக்கடை பகுதிகளில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, தில்லைக்கரசி, கோவிந்தன் வடிவேலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.