காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக மேட்டூர் அணைக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கனஅடி வரை வந்துகொண்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு விநாடிக்கு 5,023 கனஅடி வீதம் வந்தது. மாலையில் 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 70.75 டி.எம்.சி.