மோரூர் கிராமத்தில் 40 பேர் ரத்த தானம் 

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி டாக்டர் அம்பேத்கர் இளைஞர் மன்றம் மற்றும் புள்ளிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி டாக்டர் அம்பேத்கர் இளைஞர் மன்றம் மற்றும் புள்ளிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மோரூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 சங்ககிரி வட்டாட்சியர் கே. அருள்குமார் ரத்ததான முகாமைத் தலைமை வகித்து அம்பேத்கர் உருவ படத்துக்கு மலர் மாலை அணிவித்து முகாமைத் தொடக்கி வைத்தார். சேலம் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கியின் தலைமை மருத்துவர் ரவீந்திரன், புள்ளிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தனசேகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்தம் பெறும் பணியில் ஈடுபட்டனர்.
 முகாமில் 40 பேர் ரத்த தானம் அளித்தனர். மோரூர் கிராம நிர்வாக அலுவலர் உஷாபிரியா, அம்பேத்கர் இளைஞர் மன்றத் தலைவர் ராம்கி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கருப்பண்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com