ஆர்ப்பாட்டம்

பி.என்.பட்டி பேரூராட்சியில் குடிநீர்க் கட்டணம் உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து திமுக

பி.என்.பட்டி பேரூராட்சியில் குடிநீர்க் கட்டணம் உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் தலைமை வகித்தார். அவைத் தலைவர் பா. கோபால் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் கே.எம். ரவிச்சந்திரன், மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாசபெருமாள், மேச்சேரி ஒன்றிய அவைத்தலைவர் அழகப்பன், சேலம் மேற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பி.பொன்னுசாமி, பி.என்பட்டி பேரூர் செயலாளர் டி.கே. பொன்னுவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com