கெங்கவல்லி அருகே நடுவலூரில் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், ஊரக வளர்ச்சி நிறுவன விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
மஞ்சள் விதைக்கரணை நேர்த்தி, சேனைக் கிழங்கு விதை நேர்த்தி, நெற்பயிரில் முட்டை மிதப்பு சோதனை, அசோஸப்ரில்லம் கொண்டு விதை நேர்த்தி, விரிடி கொண்டு நாற்றுகளை நேர்த்தி செய்வது குறித்த செயல் விளக்க பயிற்சிகளை விவசாயிகளுக்கு வழங்கினர். இதில், நடுவலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.