கெங்கவல்லி அருகேயுள்ள கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் சுத்தம், சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதையொட்டி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் டை-பெல்ட், ரிப்பன் வழங்கப்பட்டது.
ஊராட்சி செயலர் மோகன்ராஜ், ரெங்கநாதன், என்.டி.எஸ்.மீனாம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.