மணிவிழுந்தான் பாவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அரசு பொதுத் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள மணிவிழுந்தான் பாவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் முறையே 565, 564, 563 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும், 550க்கு மேல் 7 பேரும், 500க்குமேல் 26 பேரும், 450க்கு மேல் 70 பேரும், 400க்கு மேல் 124 பேரும் பெற்றுள்ளனர். மேலும், வேதியியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் ஒருவரும், கணக்குப் பதிவியலில் ஒருவரும், தமிழில் 99 மதிப்பெண்கள் 2 பேரும்
பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பழனியப்பன், துணைத் தலைவர் டி.பூபாலன், செயலர் என்.மண்மணி, இணைச் செயலர் பி.பழனிவேல், பொருளாளர் எஸ்.பி.சுப்பிரமணியம், முதல்வர் பி.குமரேசன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பரிசு வழங்கி பாராட்டினர்.