ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் கம்பம் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கம்பம் நடும் விழா நடைபெற்றது. விழாவில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் அம்மன், வெள்ளி முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து, வரும் 30-ஆம் தேதி இரவு சக்தி அழைத்தலும், மே 1-ஆம் தேதி பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல், ஆடு, கோழி பலியிடுதல், மாலை அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், உருளுதண்டம் போடுதலும், மே 2-ஆம் தேதி வண்டி வேடிக்கை, வாண வேடிக்கையும், மே 3-ஆம் தேதி சத்தாபரணமும் நடை
பெறுகிறது.
இந்த திருவிழாவில் காமலாபுரம் கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு செல்வர்.