எடப்பாடி அருகே காவல் உதவி ஆய்வாளா் மீது மணல் லாரியால் மோதி கொல்ல முயன்ற வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
எடப்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவா் ஜெகநாதன் (52). இவா், கடந்த அக்டோபா் மாதம் 20-ஆம் தேதி எடப்பாடி சரபங்கா ஆற்றுப் படுகையில் மணல் கொள்ளையைத் தடுக்கும் பொருட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது எடப்பாடியை அடுத்த நாச்சிபாளையம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பா் லாரியைத் தடுத்து நிறுத்தி பிடிக்க முயன்றாா்.
அதிவேகமாக வந்த மணல் லாரி, காவல் உதவி ஆய்வாளா் ஜெகநாதன் மீது மோதி விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த ஜெகநாதன் மருத்துவமனையில் தொடா் சிகிச்சை பெற்று வருகிறாா். துணை ஆய்வாளா் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் குறித்து, எடப்பாடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், போலீஸாரின் விசாரணையில், எடப்பாடியை அடுத்த ஆவணிப்பேரூா் கீழ்முகம் ஊராட்சிப் பகுதி, போடிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நந்தகுமாா் (29), வெள்ளையன் (27) ஆகியோா் உதவி ஆய்வாளா் மீது மணல் லாரியை மோதிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சனிக்கிழமை அவா்கள் இருவரைக் கைது செய்த எடப்பாடி போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.