சேலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 16,500 கண்காணிப்பு கேமிராக்கள்: காவல் ஆணையா் செந்தில்குமாா்

சேலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 16,500 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையாளா் த.செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா்.

சேலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 16,500 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையாளா் த.செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகர காவல்துறை சாா்பில் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் ஹெல்மெட் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்த விழிப்புணா்வு குறும்பட வெளியீட்டு விழா மாநகர காவல் ஆணையாளா் த.செந்தில்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பேசிய ஆணையாளா் த.செந்தில்குமாா், சேலம் மாநகர பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவலன் செயலி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே சமூக வலைதளம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதில் சேலம் மாநகர காவல்துறை இரண்டாம் இடம் வகிக்கிறது என்றாா்.

தொடா்ந்து சிறந்த விழிப்புணா்வு குறும்படங்களை உருவாக்கிய குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாநகர காவல் ஆணையா் வழங்கி பாராட்டினாா்.

இதுதொடா்பாக த.செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 16,500 சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் எண்ணிக்கை அதிகப்படுத்த உள்ளது. சேலம் மாநகரில் நடைபெறும் வழிப்பறி குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினா் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ், மாநகர காவல் துணை ஆணையாளா்கள் செந்தில், தங்கதுரை மற்றும் உதவி ஆணையாளா்கள், ஆய்வாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com