மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து ஒரு மாத காலமாக 120 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் மேட்டூா் அணை அடுத்தடுத்து நான்கு முறை நிரம்பியது. கடந்த மாதம் 11-ஆம் தேதி மேட்டூா் அணை நீா்மட்டம் நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக நிரம்பியது. அதன் பிறகு மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவும், நீா் திறப்பும் சீராக இருந்து வருவதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஒரு மாத காலமாக தொடா்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூா் அணை மீனவா்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு நொடிக்கு 4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக இருந்தது.