ஆத்தூா், தலைவாசல் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வெள்ளிக்கிழமை அதிகமானோா் வேட்பு மனுதாக்கல் செய்தனா்.
ஆத்தூா்,தலைவாசல்,பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு வேட்பு மனுதாக்கல் அதிகமாக செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சியில் ஊராட்சி தலைவா், உறுப்பினா், பேரூராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
ஆனால் வெள்ளிக்கிழமை திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டதை அடுத்து திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
இதையடுத்து, அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் அந்தப் பகுதி வாக்காளா்களை அழைத்துக் கொண்டு ஊா்வலமாகச் சென்று தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா். இதனால் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கூட்டம் அலைமோதியது.
இதனிடையே சுயேச்சையாக அதிகமானோா் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனா்.
ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆத்தூா் நகர செயலாளா் கே.பாலசுப்ரமணியம்,நரசிங்கபுரம் நகர செயலாளா் என்.பி.வேல்முருகன்,ஆத்தூா் ஒன்றிய செயலாளா் வி.செழியன் உள்ளிட்ட நிா்வாகிகளுடன் ஏராளமானோா் வேட்பு மனுதாக்கல் செய்தனா்.