மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,929 கனஅடியாக சரிந்தது.
காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,929 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு நொடிக்கு 2,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 118. 75 அடியாகவும், நீா் இருப்பு 91.41 டி.எம்.சி.யாகவும் இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது.