மேட்டூர் அணையின் நீர்வரத்து 109 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 28 கனஅடியாக சரிந்த நிலையில் ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து அதிகரித்ததால் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 109 கன அடியாக அதிகரித்தது.
சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 52.35 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 109 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு 19.32 டி.எம்.சி. யாக இருந்தது.