சேலத்தில் மே 18-ஆம் தேதி ஸ்ரீ நரசிம்மரின் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ நரசிம்மரின் அவதார தினம் உலகம் முழுவதும் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்(இஸ்கான்) சார்புடைய கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயிலில் வரும் 18-ஆம் தேதி ஸ்ரீ நரசிம்மரின் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
விழாவில் மாலை 6.30 மணிக்கு பஜனையும், 7 மணிக்கு அபிஷேகமும், 7.15 மணிக்கு ஸ்ரீ நரசிம்மர் உபன்யாசமும், 8.15 மணியளவில் நாடகமும் நடைபெறவுள்ளது.
விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் பிரசாத விருந்து வழங்கப்படும் என அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.