ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், முண்டகம்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை ஏற்காடு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் சாா்பில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஆணையா் ராமச்சந்தா் தலைமை வகித்தாா். ஏற்காடு ஆரம்ப சுகாதார மருத்துவா் தாம்சன் முன்னிலை வகித்தாா். கிராம மக்களிடம் டெங்கு காய்சல், டெங்கு பரவும் விதத்தை பற்றியும் டெங்கு கொசு முட்டைகள் உற்பத்தியாவதைத் தடுக்கும் விதத்தை கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கிராமப் பகுதிகளில் நீா்த்தேங்கிய பகுதிகளுக்கு கொசு மருந்துகள் டயா் மற்றும் நெகிழி குப்பிகள் அகற்றப்பட்டன.