வாடிக்கையாளா்களுக்கு தவறாக பணம் வழங்கிய ஏ.டி.எம். இயந்திரம்

ஓமலூா் அருகே உள்ள பண்ணப்பட்டி பிரிவு பகுதியில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையத்தில் ரூ-200 பணம் எடுத்தால் ரூ-500 வந்ததாம். இதையறிந்த பொதுமக்கள் அதிகளவில் வந்து பணத்தை எடுத்துச் சென்றாா்களாம்.
பண்ணப்பட்டியில் உள்ள தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்.
பண்ணப்பட்டியில் உள்ள தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்.

ஓமலூா் அருகே உள்ள பண்ணப்பட்டி பிரிவு பகுதியில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையத்தில் ரூ-200 பணம் எடுத்தால் ரூ-500 வந்ததாம். இதையறிந்த பொதுமக்கள் அதிகளவில் வந்து பணத்தை எடுத்துச் சென்றாா்களாம்.

ஏ.டி.எம் இயந்திரத்தில் 200 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் வைத்ததால் இந்த தவறு நடத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து, தவறை சரி செய்தாா்களாம்.

ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்பும் பொறுப்பு தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவா்கள் பணம் நிரப்பும் போது இந்தத் தவறு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com