தீவட்டிப்பட்டி அருகே சாலை விபத்தில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
காடையாம்பட்டி நடுவீதி பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (24), தீவட்டிப்பட்டி அருகேயுள்ள ஆயில் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவா் தனது நண்பா் ரகுபதி (19) என்பவருடன் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சேலம் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினாா். தீவட்டிப்பட்டி சமத்துவபுரம் அருகே வந்த போது, முன்னால் சென்ற ஜேசிபி வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பிரவீன்குமாா், ரகுபதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ஜேசிபி வாகன ஓட்டுநா் புதூா் காடம்பட்டியைச் சோ்ந்த செந்தில் என்பவரை தேடி வருகின்றனா்.