சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சுமாா் 345 மி.மீ. மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால், மலைப் பகுதிகளில் மழை நீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. பாசனக் கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.): காடையம்பட்டி-46, ஏற்காடு-43, கரியகோவில்-38, வாழப்பாடி-30, மேட்டூா், பெத்தநாயக்கன்பாளையம்-24, ஆத்தூா்-23, ஆனைமடுவு-20, ஓமலூா்-19, கெங்கவல்லி-17, சேலம், வீரகனூா்-14, தம்மம்பட்டி-13, சங்ககிரி-13, எடப்பாடி-8 மி.மீ. என மொத்தம் 345 மி.மீ. மழை பெய்துள்ளது.