அதிமுக-வுக்கு வாக்களியுங்கள்:  அன்புமணி ராமதாஸ் பிரசாரம்

காவிரி உபரிநீரை விவசாய நிலங்களுக்கு வழங்க பாடுபடும் அதிமுக-வுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்

காவிரி உபரிநீரை விவசாய நிலங்களுக்கு வழங்க பாடுபடும் அதிமுக-வுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என மகுடஞ்சாவடியில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மகுடஞ்சாவடியில் அதிமுக வேட்பாளர் பி. காளியப்பனை ஆதரித்து பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசியதாவது:
தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியை அடுத்து விவசாயிகளுக்கு ரூ. 6,000 வழங்கி வரும் மோடி ஆட்சியைத் ஆதரிக்க வேண்டும், சேலம் மாவட்டத்துக்கு காவிரி உபரி நீரை விவசாய நிலத்துக்கு வழங்க பாடுபட்டு வரும் முதல்வர் கே. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை ஆதரித்தும் நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த பிரசாரக் கூட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சங்ககிரி எம்.எல்.ஏ. எஸ். ராஜா, பாமக தெற்கு மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை, மாநில மாணவர் அணி செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com