தம்மம்பட்டி அருகே வித்யோ அமிர்தாஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் கராத்தே போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
நாகியம்பட்டி வித்யோஅமிர்தாஸ் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று 2 தங்கம்,2 வெள்ளிப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் தேர்வு பெற்ற மாணவர்களைப்பாராட்டி பள்ளியின் தலைவர் மருத்துவர் முருகேசன்,பொருளாளர் பாப்புதங்கவேல்,முதல்வர் நெல்சன்பாபு, பயிற்சியாளர் ராமன் உள்ளிட்டோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.