குடிநீர் கட்டண வரி உயர்வை ரத்து செய்யக் கோரி மனு

கெங்கவல்லி பேரூராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டண வரி உயர்வை ரத்து செய்யக் கோரி தமிழக முதல்வரிடம் அப் பகுதியினர் சார்பில் கோரிக்கை மனு செவ்வாய்கிழமை அளிக்கப்பட்டது.

கெங்கவல்லி பேரூராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டண வரி உயர்வை ரத்து செய்யக் கோரி தமிழக முதல்வரிடம் அப் பகுதியினர் சார்பில் கோரிக்கை மனு செவ்வாய்கிழமை அளிக்கப்பட்டது.
 தலைவாசலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட நிகழ்ச்சியில், கெங்கவல்லியைச்சேர்ந்த கல்விச்சுடர் காமராஜர் அறப்பணி மன்றம் சார்பில் அதன் தலைவர் முருகவேல், செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கெங்கவல்லி பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்துப் பெற்று இந்த மனுவை அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com