சேலத்தில்ரூ. 1 கோடி மதிப்பில் ஜவுளிகளை வாங்கி மோசடி: வியாபாரிகள் புகார் 

சேலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஜவுளிகளை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் கடை நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டதாக வியாபாரிகள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்

சேலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஜவுளிகளை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் கடை நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டதாக வியாபாரிகள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
 சேலம் சூரமங்கலத்தில் தனியார் ஜவுளிக்கடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள வியாபாரிகள் மொத்தமாக ஜவுளிகளைக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கி செல்வர்.
 ஈரோடு, ராஜபாளையம், கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இந்த நிறுவனத்தில் துணிகளை அதிகளவு கொடுப்பது வழங்கம்.
 துணிகளை கொடுத்தவுடன் 30 சதவீத பணத்தை முன்தொகையாகவும், பின்னர் 30 நாள்களுக்கு பிறக மீதமுள்ள பணத்தை வியாபாரிகளுக்கு கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திடீரென கடையை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் துணிகளைக் கொடுத்திருந்த 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
 இதனிடையே பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
 இந்த நிறுவனத்துக்கு வியாபாரிகள் ஜவுளிகளை அதிகளவில் கொடுத்திருந்த நிலையில் திடீரென கடையை மூடிவிட்டு சென்றுவிட்டனர்.
 இதனால் அவர்களை உடனடியாக பிடித்து எங்களுக்கான தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் மொத்தமாக ரூ. 1 கோடிக்கும் மேல் தர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com